சென்னையில் அமைதியாக நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டம்

0 691

சென்னையில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இன்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ஆடல்-பாடலுடன் நடைபெற்றது.

புத்தாண்டு கொண்டாட்டங்களை அமைதியான முறையில் நடத்தி முடிக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருந்தனர். 15 ஆயிரம் போலீசார் இரவு விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோரை போலீசாரும் தீவிரமாக கண்காணித்தனர். இதனால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை.

அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தன. கடந்த ஆண்டு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருந்தன. இந்த ஆண்டு அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments