புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..!

0 1020

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியிருந்த நிலையில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

சென்னை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்றனர். பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் அங்கு திரண்டிருந்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தணையில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நள்ளிரவு 12மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உலக மக்க நலமுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சவேரியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் நாசரேன் சூசை தலைமையில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தணை நடைபெற்றது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்னை நடைபெற்றது.

திருச்சி, கொடைக்கானலில் உள்ள பல்வேறு தேவாலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments