முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Apr 27, 2025
முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Apr 27, 2025
ஈரான் துறைமுகத்தில் சக்தி வாய்ந்த வெடி விபத்து
Apr 27, 2025
முகப்பு
5,000 பெண்கள் பாதிப்பு... ஃபேமிலி Whatsapp க்ரூப்... 19 வயது இளம்பெண் ஆபாச வீடியோ; பகீர் வாக்குமூலம்!
Apr 16, 2025 02:14 AM
389
5,000 பெண்கள் பாதிப்பு... ஃபேமிலி Whatsapp க்ரூப்... 19 வயது இளம்பெண் ஆபாச வீடியோ;
சென்னையில் உள்ள பியூட்டி பார்லரில் பணியாற்றி வருகிறார், அந்த 19 வயது இளம்பெண். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த இளம்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் இருக்கக்கூடிய வாட்ஸ் ஆப் குரூப்பில் இளம்பெண் நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதனைக் கண்ட குடும்ப உறுப்பினர்கள் இளம்பெண்ணிடம் இதுகுறித்து கேட்டப்போது, அதில் வருவது தான் இல்லை எனக்கூறியதோடு, மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு உயிரை மாய்த்துகொள்ளும் எண்ணத்திற்கும் சென்றதாக கூறிய அந்த இளம்பெண்,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.
ஏ.ஐ தொழில்நுட்பம் பூதாகரமாக வளர்ச்சியடைந்துள்ளது, குறிப்பாக இறந்தவரின் குரல், புகைப்படம், வீடியோ என கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு உருவாக்கி, வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது ஒரு புறமிருக்க ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சைபர் கும்பல் அரங்கேற்றும் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வழக்கறிஞர் அருண் கூறும்போது, இளம்பெண்ணை போல ஏ.ஐ மூலமாக ஆபாச வீடியோக்களை உருவாக்கி, சைபர் கிரைம் கும்பல் பரப்பி வருவதாகவும், இந்த வீடியோக்களை இளம்பெண்ணின் டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற ஐடிக்களுக்கு அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இளம்பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு சென்று ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பதுபோல வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் இல்லையேல் அனைவருக்கும் இந்த வீடியோவை பரப்புவேன் என அவர்கள் மிரட்டியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.
குறிப்பாக, அந்த சைபர் கிரைம் கும்பல் உடனடியாக வீடியோ பரப்பும் ஐடிக்களை டி- ஆக்டிவேட் செய்து வேறொரு ஐடி மூலமாக வந்து மீண்டும் மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கும்பல் ஏ.ஐ மூலமாக உருவாக்கிய இளம்பெண்களின் ஆபாச வீடீயோக்களை விற்பனை செய்து, அதை பிட் காயின் மூலமாக மட்டுமே பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இப்படி, நாடு முழுவதும் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 70% பெண்கள் பயந்து புகார் கொடுக்க முன் வரவில்லை எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆன்லைன்வாகனச் செயலிகளை அதிகளவில் பயன்படுத்துவதால், அப்போது கொடுக்கும் நம்பரை பயன்படுத்தி, ஐடிக்களை எடுத்து சைபர் கும்பல் இதுபோன்ற விஷம செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இளம்பெண்கள் ஆன்லைன் வாகனச் செயலியை பயன்படுத்தும் போது உஷாராக இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்திற்கு இளம்பெண்கள் பலர் பிழைப்பு தேடி வருகின்றனர், இதுபோன்ற செயலால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் முன் வந்து பயப்படாமல் புகார் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
சென்னையிலுள்ள பியூட்டி பார்லரில் பணிபுரியும், மணிப்பூரைச்சேர்ந்த 19 வயது இளம்பெண் கொடுத்த புகார் சம்பந்தமாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu