RECENT NEWS

சென்னை அணியில் இணைந்த இளம் அதிரடி வீரர் யார்?? இனி வெற்றி நடை போடுமா???

BIG STORIES

”எடுத்த சபதம் முடிப்பேன்” ஹரியானாவில் ஒரு அண்ணாமலை..14 ஆண்டுகள் செருப்பு அணியாத நபருக்கு ஷூ வாங்கி கொடுத்த பிரதர் மோடி

Apr 15, 2025 04:43 PM

147

ஹரியானாவில் ஒரு அண்ணாமலை..14 ஆண்டுகள் செருப்பு அணியாத நபருக்கு ஷூ வாங்கி கொடுத்த பிரதர் மோடி

மோடி பிரதமராக வலியுறுத்தி, 14 ஆண்டுகளாக செருப்பு அணியாமல் இருந்த பாஜக தொண்டர், அவருக்கு பிரதமர் மோடியே செருப்பு அணிவித்த சம்பவம் நெகிழ்ச்சியான தருணமாக மாறியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சபதம் எடுத்திருந்தார்.

கட்சி கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை, செருப்பு அணியாமலேயே இருந்தார். அவரின் வைராக்கியத்தை பாஜக தொண்டர்கள் பலரும் பாராட்டி வந்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் புதிய தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன், அண்ணாமலைக்கு செருப்பு வாங்கி கொடுத்ததையெடுத்து, அவர் தனது சபத்தை முடித்து கொண்டார்.

இதேப்போன்ற சம்பவம் தற்போது ஹரியானாவிலும் நடத்திருப்பது, சுவாரிஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்பவர், ”மோடி, பிரதமராக பதவியேற்கும் வரை செருப்பு அணிய மாட்டேன்” என சபதம் எடுத்தார்.

இதனையெடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றார். அப்போது பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ராம்பால் பலமுறை முயற்சி செய்தும், அது பலனளிக்கவில்லை. அதைத்தொடர்ந்து ”பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன்” என முடிவெடுத்திருந்து கடந்த 14 ஆண்டுகளாக தனது விரதத்தை பின்பற்றி வந்திருக்கிறார்.

இந்நிலையில், அரியாணாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 14 ஆண்டுகளாக செருப்பு அணியாத ராம்பால் காஷ்யப் என்ற நபருக்கு ஒரு ஜோடி செருப்புகளை பரிசளித்தார்.

இது தொடர்பான வீடியோவையும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், "யமுனாநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கைத்தலைச் சேர்ந்த ஸ்ரீ ராம்பால் காஷ்யப் ஜியைச் சந்தித்தேன். நான் பிரதமரான பிறகுதான் செருப்பு அணிவேன் என்று அவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு சபதம் எடுத்திருந்தார்”..

"ராம்பால் போன்றவர்களால் தான் நான் பணிவுடன் இருக்கிறேன், அவர்களின் பாசத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் அன்பை நான் மதிக்கிறேன். ஆனால் தயவுசெய்து சமூகப் பணி மற்றும் தேசக் வளர்ச்சிக்கு தொடர்புடைய ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக தொண்டர் ராம்பால் காஷ்யப் கடந்த 14 ஆண்டுகளாக இந்த சபதத்தை பின்பற்றுவதற்கு அவரது குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்புடன் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நடிகை பற்றவைத்த நெருப்பு... ஹோட்டலிலிருந்து தப்பி ஓடிய
‘குட் பேட் அக்லி’ வில்லன்... பரபரப்பு CCTV; நடந்தது என்ன?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies