RECENT NEWS

"எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்" - ரஷ்ய அதிபர்

BIG STORIES

மின்சாரம் தாக்கி கணவன் புள்ளத்தாச்சி மனைவி கருகி வெந்த விபரீதம்..! சிறு கவனக்குறைவும் பேராபத்து

Apr 15, 2025 04:05 PM

540

மின்சாரம் தாக்கி கணவன் புள்ளத்தாச்சி மனைவி கருகி வெந்த விபரீதம்..!

சிறு கவனக்குறையும் பேராபத்தாக மாறிவிடும் என்பதற்கு சமூகத்தில் நடக்கின்ற விபரீத உயிர் இழப்புகளை உதாரணமாக சொல்லலாம். நாம் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தக் கூடிய எரிவாயு சிலிண்டரை முறையாக பராமரிக்க தவறினாலோ, கியாஸ் கசிவை கண்டுணர மறந்தாலோ அது ஒரு கட்டத்தில் பேராபத்தாக முடியும்.. இதனால் பல வீடுகள் தரைமட்டமான விபரீதம் நிகழ்ந்துள்ளது. கோடை காலம் தொடங்கி விட்டது இடைவிடாத பயன்பாட்டில் இருக்கும் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதங்களிலும் இதே ஆபத்து உள்ளது என்று சுட்டிக்காட்டும் எலக்ட்ரீசியன்கள் கூடுமானவரை ஏசி, பிரிட்ஜை தக்க நேரத்தில் சர்வீஸ் செய்து தேவைக்கேற்ப அளவாக பயன்படுத்துவது தீ விபத்து ஏற்படுவதை தடுக்கும் என்கின்றனர்.

இவற்றுக்கெல்லாம் மேலானது நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்ற மின்சாரம்..! வீட்டில் மின்சாரத்தை கையாளும் போது எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்... அயன்பாக்ஸ் வயரிலும், தண்ணீர் சுட வைக்கிற ஹீட்டர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் போதும் அதீத எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்...!

வீட்டிலேயே இப்படி என்றால் வெளியில் திறந்த வெளியில் செல்லக்கூடிய மின் கம்பிக்கு அருகே மின்சார வயரை பயன்படுத்தும் போது மைக் செட் உரிமையாளர்கள் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..? அப்படி முன் எச்சரிக்கையில்லாமல் ஒரு ஒலிப்பெருக்கி நிலைய உரிமையாளர் செய்த கவனக்குறைவான வேலையால் ஒரு குடும்பமே தீயில் கருகி உள்ளது... தந்தை, கர்ப்பிணி தாய், பாட்டி என அனைவரையும் இழந்து இரண்டரை வயது குழந்தை நிற்கதியாகி தவித்து இருக்கின்றது. நடந்தது என்ன ? விவரிக்கின்றது இந்த எச்சரிக்கை செய்தித்தொகுப்பு..

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே காரிசேரியை சேர்ந்தவர் திருப்பதி. இஅவரது மனைவி லலிதா 7 மாத கர்ப்பிணியாக உள்ள இவருக்கு திங்கட்கிழமை காலையில் தான் வளைகாப்பு நடந்தது. மாலையில் மாரியம்மன் கோவிலில் பங்குனி எட்டாம் பொங்கல் விழாவிற்காக மைக் செட் அமைக்கும் பணியில் திருப்பதி ஈடுபட்டார். திருப்பதியின் வீடு கோவிலுக்கு அருகில் உள்ளதால் வீட்டு வாசலில் அமர்ந்து கணவன் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தார் லலிதா, கோவிலுக்கு எதிர்புரம் 200 மீட்டரில் உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டி மீது ஒலிப்பெருக்கியை கட்டுவதற்காக , சாலையை கடந்து வயரை இழுத்துச்சென்ற திருப்பதி, மின் கம்பத்தை தாண்டி கொண்டு செல்ல முயன்றார்.

அப்போது கவனக்குறைவாக திருப்பதி வீசிய வயர், உள்ளூர் மின் கம்பத்தை தாண்டி , உயர் மின்னழுத்த கம்பி மீது பட்டது. இதில் மின்சார வயர் வழியாக பாய்ந்த உயர் அழுத்த மின்சாரத்தால் திருப்பதி உடல் தீப்பற்றி எரிந்தது. தீயில் சிக்கி தனது கணவர் துடிப்பதை பார்த்த அவரது கர்ப்பிணி மனைவி லலிதா செய்வதறியாது ஓடிச்சென்று மீட்க சென்றார், இதனால் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் தீ பற்றி எரிந்த நிலையில் சத்தம் கேட்டு வந்த திருப்பதியின் பாட்டி பாக்கியம், எம் பேரனையும், “வயித்து பிள்ளைக்காரியையும் காப்பாத்துங்க..” என்று கூப்பாடு போட்ட படியே அவர்களை காப்பாற்ற சென்றுள்ளார். துரதிர்ஷ்டவசமாக அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் 3 பேரும் ஒன்றாக தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகின்றது.

உடனடியாக உள்ளூரில் உள்ள டிரான்ஸ் பர்மரின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். மின்சாரம் பாய்ந்தது உயர் அழுத்த மின் கம்பி என்பதால் அதில் வரும் மின்சாரம் தடைபடாமல் தொடர்ந்து வந்துள்ளது. ஒரு கம்பை வைத்து மின்சாரம் பாய்ந்த வயரை எடுத்து போட்டு விட்டு 3 பேரையும் மீட்க முயற்சி செய்துள்ளனர். அந்த கம்பும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் இவர்களை காப்பாற்ற முயன்ற திருப்பதியின் அண்ணன் தர்மர் மற்றும் சகோதரர் கவின் ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து ஊரே பதற்றத்துடன் செய்வதறியாமல் திகைத்து நின்றது. சுமார் அரை மணி நேர முயற்சிக்கு பின்னர் பக்கது ஊரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் நிறுத்தப்பட்டதாகவும், அதன் பின்னரே 3 பேரின் சடலத்தையும் மீட்க முடிந்ததாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திங்கட்கிழமை காலையில் தான் வளைகாப்பு நடத்தப்பட்ட நிலையில் இந்த உலகத்தை பார்க்காத அந்த பச்சிளம் சிசுவும், லலிதாவின் வயிற்றிலேயே தீயில் வெந்து இறந்து போனது பரிதாபத்தின் உச்சம். இவர்களது சடலத்தை கண்டு ஊரே கதறி அழுதது

சம்பவ இடத்திற்கு விரைந்த ஆமத்தூர் காவல் துறையினர் இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த குடும்பமும் கவனக்குறைவாலும், அவசர புத்தியாலும் உணர்ச்சிவசப்பட்டு விபரீதமாக பலியானதாக போலீசார் தெரிவித்தனர். மின்கம்பிகள் நெருக்கமாக இருக்கும் இடத்தில் மின் வயரை வீசுவதற்கு முன்பாக சிறிது சிந்தித்து செயல்பட்டிருந்தால் இந்த பேரபாயம் நிகழ்ந்திருக்காது. தன் கணவன் மின்சாரத்தில் சிக்கி இருக்கும் சூழலில் அவசரப்பட்டு அவரை தொட்டதால் மனைவியும், அவரை தொடர்ந்து பாட்டியும் தங்கள் உயிரை இழந்துள்ளனர் . வழக்கமாக மின்சாரம் தாக்கினால் மரக்கட்டையால் தள்ளிக்காப்பாற்றிவிடலாம், ஆனால் இந்த சம்பவத்தில் மரக்கட்டையால் மின்சார வயரை தொட்டவர்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இது மைக் செட் உரிமையாளர்களுக்கும் அவர்களிடம் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை பாடம் . ஒரு சிறு மின்சார விபத்து உங்கள் வாழ்க்கையையே வீணாக்கி விடும். 3 பேர் பலியானதால் திருப்பதியின் இரண்டரை வயது மகன் ஆதரவின்றி நிற்கதியாக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். முன் எச்சரிக்கையை மறந்து நாம் செய்கின்ற கவனக்குறைவும் குற்றம் தான்..! குற்றம் கேடு தரும்..!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies