BIG STORIES
போலீஸை ஊரில் கட்டி வைப்போம்.. சாராய வியாபாரியிடம் சீருடையில் வந்து மாமுல்..?.. பஞ்சாயத்திற்கே பஞ்சாயத்து...!
Apr 15, 2025 10:39 AM
287
போலீஸை ஊரில் கட்டி வைப்போம்.. சாராய வியாபாரியிடம் சீருடையில் வந்து மாமுல்..?..
கள்ளச்சந்தையில் சாராயம் விற்பனை செய்வோரிடம் சீருடையில் வந்து மாமுல் வாங்கும் காவலரை கட்டி வைத்து விடுவோம் என எஸ்.ஐயிடம் கிராமமக்கள் எச்சரிக்கை விடுத்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கடம்பர் வாழ்க்கை, மேலவெளி, கொத்தமங்கலம், எல்சியம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கள்ளச்சாராய பழக்கத்தால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரையிலும் ஏன் பள்ளிச் செல்லும் மாணவர்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு பாதிப்புகளை சத்தித்து வருவதாக கூறப்படுகிறது.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை நடத்துவதற்காக 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடம்பர் வாழ்கையில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஒன்று திரண்டனர்.
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், கீழ்வேளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அழகேந்திரன் பங்கேற்று சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கினார்.
சாராயம் விற்பவர்கள் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுப்போம் என எஸ்.ஐ அழகேந்திரன் பேசும் போது கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்தார்.
சாராய வியாபாரிகளிடம் கீழ்வேளூர் போலீஸார் சிலர் சீருடையிலேயே வந்து மாமூல் வாங்கி செல்கின்றனர். உங்களை அவமரியாதை செய்வதற்காக சொல்லவில்லை இதுதான் உண்மை என அந்த நபர் கூறினார்.
என்ன பேசுவதென தெரியாமல் விக்கித்து நின்ற எஸ்.ஐ அழகேந்திரன், உங்கள் பெயர் என்ன, இதனை நீங்கள் என்னிடம் தனியாகத் தானே சொல்ல வேண்டும், இப்படி பொதுவெளியில் பேசலாமா எனக் கேட்டார்.
என் வீட்டு வாசலில் வைத்தே லஞ்சம் வாங்கினார்கள், இதனை உங்களிடம் கூறியுள்ளேன் என அந்த நபர் கூற, அங்கிருந்த பெண்களும் எங்களுக்கெல்லாம் தெரிந்து தான் லஞ்சமே வாங்குகிறார்கள் என கூறினர்.
லஞ்சம் வாங்கிய காவலர்களை நான் பார்த்துக் கொள்கிறேன், உங்கள் ஊரை நீங்கள் பார்த்துக் கொள்வீர்களா என அந்த எஸ்.ஐ பதில் கேள்வி கேட்டார்.
போலீஸ் சப்போர்ட்டால் தான் வியாபாரிகள் தைரியமாக சாராயம் விற்பதாக கூட்டத்திலிருந்த மற்றொருவர் கூற, யார் அந்த போலீஸ் என எஸ்.ஐ கேட்கவும், இவரும் ஒரு போலீஸ் தான் என பெண் ஒருவர் கூறினார்.
மாமுல் வாங்கும் போலீஸார் குறித்து ஆதாரத்துடன் தெரிவித்தால், நடவடிக்கை எடுப்பதாக எஸ்.ஐ அழகேந்திரன் உறுதியளித்தார்.
கிராமங்களுக்கு வரும் பாதைகளின் முக்கிய இடங்களில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என எஸ்.ஐ அழகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu