BIG STORIES
முத்தமிட்டது தப்பா ?.. போக்சோ போதகர்.. வெளியானது ஆடியோ
Apr 08, 2025 08:10 AM
464
முத்தமிட்டது தப்பா ?.. போக்சோ போதகர்.. வெளியானது ஆடியோ
எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கடவுளின் மீது உண்மையான பயம் கொண்டோர்... குற்றம் செய்ய துணியமாட்டார்கள்... மனிதனை மறந்து அவனிடம் கடவுளே நான் தான் என்றும் கடவுளிடம் நேரடியாக பேசுவதாகவும் கூறுவோர் அளந்து விடும் கதைகள் ஆயிரமாயிரம் என்றாலும் பணத்துக்காக அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குற்றம் மறைந்திருக்கும்.
அந்தவகையில் கர்த்தரை கொண்டு சேர்க்கிறேன் என்று காணிக்கைக்காக ராப் இசையுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்த்துடன் முளைத்த திடீர் போதகர்கள் செய்யும் சேட்டைகள் எல்லை மீறிக் கொண்டிருப்பதாக சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இந்த நிலையில் தான் ராப் இசையுடன் ஊர் ஊராக ஆடிவந்த.. அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிய போதகர் ஜான் ஜெபராஜ் ... இறுதியாக போக்சோ வழக்கில் சிக்கி ஊர் ஊராக ஓடி வருகின்றார்.
யார் இந்த ஜான் ஜெபராஜ்..? எதற்காக இவர் மீது போக்சோ வழக்கு..? இவருக்கும் இவரது மனைவிகளுக்கும் என்ன பிரச்சனை ..? சிறுமிக்கு முத்தமிட்ட வீடியோ எப்படி வெளியானது..? விரிவாக பார்க்கலாம்...
கோவை ஜி என் மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். நெல்லையை பூர்வீகமாக கொண்ட ஜான் ஜெபராஜ் தன்னை கிறிஸ்தவ மத போதகராக சொல்லிக் கொண்டு, கிறிஸ்துவ பாடல்களை பாப் இசையில் பாடி இளைஞர்களை கவர்ந்து வந்தார்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் சென்று பாப் இசை நிகழ்ச்சிகள் நடத்தி, கிறிஸ்தவ மத பாடல்களை பாடி தேவனை ஆதாரத்திப்பதாக கூறி ஆட்டம் போட்டு வந்தார்
மத போதகர் ஜான் ஜெபராஜ் , எட்வின் ரூசோ என்பவருடன் இணைந்து கோவை கிராஸ்கட் ரோடு சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் பிரார்த்தனை கூடம் நடத்தி வந்தனர்.
சபைக்கு வரும் மக்களிடம் தசமபாதமாக வசூலிக்கப்படும் காணிக்கையை பிரிப்பதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறால் ஜான் ஜெபராஜ் அடித்து விரட்டப்பட்டார். இந்த அலுவலகத்தை விட்டு சென்ற ஜான் ஜெபராஜ் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி ஆடியோ வெளியிட்டு வந்தார்
அவர் வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடியாக பார்ட்டி ஒன்றில் சிறுமிக்கு ஜான் ஜெபராஜ் முத்த மிடும் வீடியோ ஒன்று வெளியானது. அதனை அவரே ஒப்புக் கொண்டு ஆடியோவும் வெளியிட்டார்.
ஆரம்ப காலங்களில் ஜான் ஜெபராஜ் பிரார்த்தனை செய்யும் பொழுது அனைத்து போதகர்களையும் வாய்க்கு வந்தவாறு திட்டியும் வந்ததால் அவரை “கொய்யா” போதகர் என்று போட்டி போதகர்கள் அழைத்து வந்தனர்
இளைஞர்களை கெடுக்கும், ஜான் ஜெபராஜ் நிச்சயம் ஒரு நாள் கர்த்தருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று மூத்த போதகர்கள் வேதனையுடனும் , ஆத்திரத்துடனும் கடந்த காலங்களில் வீடியோ வெளியிட்டனர்
இந்த நிலையில் தான் ஊர் ஊராக போட்ட ஆட்டத்துக்கு சற்று ஓய்வு கொடுக்கும் விதமாக ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பாய்ந்திருக்கின்றது.
தனது முதல் மனைவியை பிரிந்து தனது காதல் மனைவியுடன் வசித்து வரும் ஜான் ஜெபராஜ் மீது இரு சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2024 ம் ஆண்டு மே 21ம் தேதி தனது இல்லத்தில் நடந்த பார்ட்டி ஒன்றின் பொழுது அதில் கலந்து கொள்ள வந்திருந்த 17 வயது மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் 17 வயது சிறுமியையும் அவருடன் இருந்த 14 வயது சிறுமியையும் ஜான் ஜெபராஜ் பாலியல் சீண்டல் செய்தது உறுதிப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
தன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் வீட்டில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கன்னியாகுமரி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே மனைவிக்கு ஆடியோ அனுப்பி உள்ள ஜான் ஜெபராஜ் ... 5 முறை தற்கொலை என்ன எழுந்ததாகவும், என்ன நடந்தது என்று நம் இருவருக்கும் தெரியும் என்றும் உன்னை அவமானப்படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஜயவாடாவில் நடந்த ஜெபக்கூட்டத்தில் அதிசயம் அற்புதத்தையும் இந்த ஆண்டில் பார்ப்பீர்கள்... என்று ஆட்டம் போட்டு ஜான் ஜெபராஜ் பாடியது யாருக்கு பொருந்தியதோ இல்லையோ, அவருக்கு கச்சிதமாக பொறுந்தி இருக்கின்றது
மதத்தை வைத்து பணம் வசூல் செய்வது பலருக்கு தற்போது முழு நேர தொழிலாக மாறிபோன சூழ்நிலையில், தற்போது பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் போதக பிசாசு கரங்கள் நீள தொடங்கி இருப்பதால் பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்..! மதம் பிடித்து செய்தாலும், மதத்தின் பெயரில் செய்தாலும் குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu