BIG STORIES
அம்பானி அரண்மனை வக்புவாரிய நிலமாம்..! திடீர் சிக்கல் பின்னணி
Apr 08, 2025 01:34 AM
252
அம்பானி அரண்மனை வக்புவாரிய நிலமாம்..! திடீர் சிக்கல் பின்னணி
மும்பையில் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு சொந்தமான பிரமாண்டமான ‘ஆன்டிலியா’ அரண்மனை வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக வழக்கு நடந்து வரும் நிலையில், வக்பு சட்டதிருத்த மசோதாவால் அந்த சொத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அம்பானி வீடு.. ஆகாச கூடு.. என்று சொல்லும் அளவுக்கு மும்பையில் 27 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிட அரண்மனையான ‘ஆன்டிலியா' உலக அளவில் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவியும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் அறக்கட்டளையின் தலைவருமான நீட்டா அம்பானி மற்றும் மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, மகள் இஷா அம்பானி ஆகியோர் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர்
பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பிறகு இரண்டாவது மிக விலையுயர்ந்த இல்லமாக திகழும் இந்த வீட்டின் மதிப்பு 15 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விரைவான பயணத்திற்கேற்ப ஹெலிபேடுகள், 168 கார்களை நிறுத்துவதற்கான பல மாடி வாகன நிறுத்துமிடம், ஆடம்பரமான ஸ்பா, வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட நீச்சல் குளம், பிரமாண்டமான கோயில் இடம், அதிவேக லிஃப்ட், தியேட்டர், ஜிம், ஏர் கண்டிஷனிங் அறைகள் என 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அப்படிப்பட்ட, அரண்மனையின் கரண்ட்பில் கட்டணம் வெளியாகி பலரையும் ஷாக் அடைய வைத்தது. அதாவது ஒரு மாதத்தில், இந்த வீடு சுமார் 6,37,240 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளது, தெரியவந்தது. இதனால், கரண்ட் பில் மட்டுமே 70,69,488 அதாவது ரூ.70 லட்ச ரூபாய் கட்டப்பட்டிருக்கிறது, என கூறப்பட்டது.
அப்படிப்பட்ட பிரமாண்டங்கள் நிறைந்த அரண்மனைக்கு , மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தொழிலதிபர் முகேஷ் அம்பானி தென்மும்பையில் வசித்துவரும் பல அடுக்கு சொகுசு மாளிகையான ‘ஆன்டிலியா’ வீடு இருக்கும் நிலம் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானது எனவும் கூறப்படுகின்றது
அம்பானியின் வீடு இருக்கும் நிலம் முன்பு கரீம் பாய் இப்ராகிம் என்பவருக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. கரீம் பாய் இப்ராகிம் என்பவர் தனது நிலத்தை வஃக்பு வாரியத்திடம் தானமாக கொடுத்துள்ளார்.
அப்போது, ஆன்மிக கல்வி மற்றும் ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று சொல்லித்தான் கொடுத்ததாக சொல்லப்படுகின்றது.
இந்த 4.5 லட்சம் சதுர அடி அளவு கொண்ட நிலத்தை தான் முகேஷ் அம்பானி 2002 ஆம் ஆண்டு 21 கோடி ரூபாய்க்கு வஃக்பு வாரியத்திடமிருந்து வாங்கி தனது கனவு இல்லத்தை கட்டியுள்ளார்.
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், வஃக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை தனிப்பட்ட தேவைகளுக்காக விற்பனை செய்ய முடியாது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருப்பது தான் முகேஷ் அம்பானியின் கனவு இல்லத்துக்கு சிக்கலாகி இருக்கிறது.
அந்த நிலத்தை அம்பானியிடம் கொடுத்தபோது வஃக்பு வாரியத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்த பிறகுதான் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக முடிவு எடுக்க வஃக்பு வாரியத்தின் கூட்டம் எதுவும் கூட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலத்தை முகேஷ் அம்பானிக்கு விற்பனை செய்ய மும்பை சாரிட்டி கமிஷனர் ஒப்புதல் வழங்கி இருந்த நிலையில் அந்த ஒப்புதலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அம்பானியின் ஆன்டிலியா அரண்மனை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu