BIG STORIES
காருக்குள் சிக்கிய காவல் ஆணையர்.. அதிக பார லாரிகளால் ஆபத்து..! சாட்டையை சுழற்றுமா போலீஸ் ?
Apr 08, 2025 01:03 AM
287
அதிகபாரம் ஏற்றி வந்ததால் முன்பக்க டயர் வெடித்த இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று, அடுத்தடுத்து வாகனங்களில் மோதியதில் சாலையில் நின்ற ஆவடி காவல் ஆணையரின் வாகனமும் விபத்தில் சிக்கியது. கனரக வாகனத்தின் தறிகெட்ட வேகத்தால் நிகழ்ந்த விபரீத விபத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
இரும்பு பாரம் ஏற்றிய டிரைலர் லாரி ஒன்று அடுத்தடுத்து வாகனங்களில் மோதியதில் , காவல் ஆணையர் பயணம் செய்த வாகனம் உடைந்து நொறுங்கியது. இதில் காருக்குள் சிக்கிய காவல் ஆணையரை மீட்கும் காட்சிகள் தான் இவை..!
ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர், முதல் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை பார்வையிட்டு சோழாவரம் ஜி.என்.டி சாலை வழியாக திரும்பிக்கொண்டிருந்தார்.
சோழாவரம் மொட்டை பாலம் அருகில் காவல் ஆணையரின் வாகனம் வந்து கொண்டிருந்த போது வாகனத்தின் வேகத்தை குறைத்துள்ளனர்.
அப்போது பின்னால் வந்த மகிந்த்ரா சரக்கு வாகனத்தின் மீது பெரிய இரும்பு ராடுகளை ஏற்றிக் கொண்டு வந்த 40 அடி டிரைலர் லாரி ஒன்று பயங்கரமாக மோதியது.
அத்தோடு நிற்காமல் தறிகெட்டு ஓடிய அந்த லாரி காவல் ஆணையர் வாகனத்தையும் உடைத்து நொறுக்கியது. லாரியின் முன்பக்க டயர் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது
சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுனர் இறங்கி ஓடிவிட, விரைந்து வந்த பொது மக்கள் காவல் ஆணையரின் வாகனத்தில் கையில் காயத்துடன் இருந்த பாதுகாப்பு காவலர் மாரி செல்வத்தை மீட்டனர்.
காவல் ஆணையர் சங்கர் அமர்ந்திருந்த பகுதியின் இரு கதவுகளும் திறக்க இயலாமல் ஜாம் ஆனதால் , காரின் பின்பக்கம் வழியாக அவரை பத்திரமாக வெளியே மீட்டுக் கொண்டு வந்தனர்.
சரக்கு வாகனத்தின் ஓட்டுனரையும் மீட்டு அவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஆந்திராவில் இருந்து துறைமுகத்திற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்த அந்த லாரியில் அளவுக்கதிகமாக இரும்பு பாரம் ஏற்றப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
சோழவரம் மொட்டை பாலம் அருகில் முன்னால் சென்ற வாகனங்கள் அடுத்தடுத்து வேகன் குறைந்ததால், ஏதிர்பாராத விதமாக லாரி ஓட்டுனர் பிரேக்கை அழுத்திய போது லாரியின் முன்பக்க டயர் வெடித்து இழுத்துச்செல்லப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது லாரி ஓட்டுனர் கங்காதர் என்பவரை கைது செய்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அளவுக்கதிகமான பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை கண்காணித்து உரிய அபராதம் விதித்து கட்டுப்படுத்த வேண்டிய போலீசார் உரிய ஆய்வுகளை மேற்கொள்வதில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu