முகப்பு
விவசாயி பெற்ற கடனை வசூலிக்க சென்றபோது நடந்த அடிதடி... விவசாயிக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகி
Jan 31, 2025 04:36 PM
76
விவசாயி பெற்ற கடனை வசூலிக்க சென்றபோது நடந்த அடிதடி..
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே விவசாயி பெற்ற கடன் தொகையை வசூலிக்க சென்ற தனியார் நிதி நிறுவன ஊழிர்களுக்கும், அப்பகுதி அ.தி.மு.க ஜெ பேரவைசெயலாளருக்கு மோதல் ஏற்பட்டது.
விவசாயி சண்முக மூர்த்தி என்பவர் கோவையைச் சேர்ந்த தனியார் நிதிநிறுவனத்தில் தனது நிலத்தை கிரையம் செய்து கொடுத்து 85 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடன் தொகையை திருப்பி செலுத்திய பிறகு மீண்டும் நிலத்தை நிதிநிறுவனம் கிரையம் செய்து வைப்பதாக இருவரும் ஒப்பந்தம் செய்த நிலையில், அதை மீறி அதிக வட்டி கேட்டதால், பணத்தை கொடுக்க முடியாமல் போனதாக விவசாயி தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் பணத்திற்கு பதிலாக விவசாய நிலத்தில் கட்டியிருந்த வீட்டில் உள்ள பொருட்களை நிதிநிறுவன அதிபர் சரவணசுஜை, ஊழியர்களுடன் சென்று வெளியே எடுத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது விவசாயிக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகி ராஜா , நிதி நிறுவன ஊழியர்களை தட்டிக் கேட்டபோது மோதல் ஏற்பட்டது.
காரில் அமர்ந்தபடி தனது ஊழியர்களை தாக்கியதை செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த நிதிநிறுவன அதிபர் சரவணசுஜையை கீழே இறங்கும்படி அதிமுக பிரமுகர் ராஜா மற்றும் ஆதரவாளர்கள் மிரட்டியபோது அவர் இறங்கவில்லை. இதையடுத்து காரை கவிழ்க்க ஒரு கும்பல் முயற்சிக்கவே சரவணசுஜை காரை வேகமாக எடுத்துக்கொண்டு தப்பித்தார்.
கும்பல் கல்வீசி தாக்கியதில் நிதி நிறுவன அதிபரின் கார் பலத்த சேதமடைந்தது. இதுதொடர்பான புகாரில் இருதரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News