RECENT NEWS

என்ன சார் சொல்றீங்க போலீசுக்கு மாவுக்கட்டா.. மனித நேயமே இல்லையா..?

முகப்பு

அருள்வாக்கு அன்ன பூரணி வீட்டில் கிடந்த சடலங்கள் தந்தை பலி ... மகள் கொலை மாயாவி மருத்துவர் கைது..!

Jan 31, 2025 01:20 AM

1216

அருள்வாக்கு அன்ன பூரணி வீட்டில் கிடந்த சடலங்கள் தந்தை பலி ... மகள் கொலை மாயாவி மருத்துவர் கைது..!

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் தந்தை மகள் சடலமாக கிடந்த சம்பவத்தில் மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். சினிமாவை மிஞ்சும் வகையில் 3 மாதங்களாக சடலங்களை அழுகாமல் பார்த்துக் கொண்ட மாயாவி மருத்துவர் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அருள் வாக்கு அன்னபூரணிக்கு சொந்தமான வீட்டுக்குள் இருந்து துர் நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். படுக்கை அறையில் அழுகிய நிலையில் ஒரு ஆண் மற்றும் பெண் சடலங்கள் கிடந்தது.

இரு சடலங்களையும் கைப்பற்றிய போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வீட்டிற்கு மருத்துவர் ஒருவர் மாயாவி போல வாரத்துக்கு ஒருமுறை வந்து செல்வார் என்றும் சடலமாக கிடந்தவர்கள் வேலூரை சேர்ந்த 70 வயதான சாமுவேல் சங்கர், அவரது மகள் சிந்தியா என்பதும் அன்னபூரணி இந்த வீட்டை இருவருக்கும் வாடகைக்கு விட்டிருப்பதும் தெரியவந்தது.

கணவரை பிரிந்து வாழ்ந்த சிந்தியாவுக்கு மருத்துவர் சாமுவேல் எபனேசர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரது அழைப்பின் பேரில் வேலூரில் இருந்து தந்தையின் டயாலிசிஸ் சிகிச்சைக்காக சிந்தியா திருமுல்லை வாயல் சென்றுள்ளார். தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியாக அன்னபூரணியிடம் வீட்டை வாடகைக்கு பெற்று சிந்தியாவையும் அவரது தந்தையையும் , மருத்துவர் சாமுவேல் எபனேசர் தங்க வைத்ததாக கூறப்படுகின்றது.

காஞ்சிபுரத்தில் இருந்து வந்து சாமுவேல் எபனேசர் சிகிச்சை அளித்துச்சென்ற நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக சங்கர் பலியானதாகவும், சரியான சிகிச்சை அளிக்காததால் தனது தந்தை இறந்து விட்டதாகவும் கூறி மருத்துவரிடம் சிந்தியா சண்டையிட்டதாகவும் கூறப்படுகின்றது. அப்போது வேகமாக தள்ளியதில் கீழே விழுந்த சிந்தியாவும் பரிதாபமாக பலியானதால் கொலை வழக்கில் சிக்கிக் கொள்வோம் என்று அஞ்சியுள்ளார் சாமுவேல் எபனேசர். இதனால் இரு சடலங்களையும் மறைக்க எண்ணிய அவர் அந்த வீட்டின் படுக்கை அறையில் இரு சடலங்களையும் படுக்கவைத்து உடல் அழுகாமல் இருப்பதற்காக சில ரசாயணத்தை ஊற்றியதோடு, துணியை சுற்றி வைத்து விட்டு , படுக்கை அறை ஏசியை 24 மணி நேரமும் ஓடவிட்டுள்ளார்.

சடலங்களை ஒன்றன் பின் ஒன்றாக அப்புறப்படுத்த திட்டமிட்டும் முடியாததால், அவற்றை வாரத்துக்கு ஒரு முறை வந்து பார்த்து விட்டு செல்வதையும் மருத்துவர் வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் 3 மாதங்களாக இடைவிடாது இயங்கிய ஏ.சி. பழுதானதால் உடல்கள் அழுக தொடங்கி துர்நாற்றம் வீசி காட்டிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து இரு சடலங்களையும் மறைத்ததாக மருத்துவர் சாமுவேலை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் வருங்காலத்தை முன் கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றிருப்பதாக யூடியூப்களில் அளத்து விடும் அருள் வாக்கு அன்னபூரணியால் தனது வீட்டில் 2 பேர் 3 மாதங்களாக சடலங்களாக அழுகி கிடப்பதை கண்டு பிடிக்க முடியவில்லையா ? என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

குழந்தையின் கழுத்தில் கத்தி.. தாயை சீரழித்த கொடூரர்கள்.. 4 மணி நேரம் நீடித்த கொடுமை..! குலை நடுங்கச் செய்த கொடூரம்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News