கனமழையால் ஜமுனா மரத்தூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பள்ளி சென்ற மாணவ, மாணவியர் கிராம மக்களால் மீட்பு

0 103

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக, ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், முள்ளிப்பட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் கிராம மக்கள், ஆற்றுப்பாலத்தை கடக்க முடியாமல் அவதிக்கு ஆளாகினர்.

பலாமரத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர், வெள்ளம் பாய்ந்தோடிய ஆற்றுப்பாலத்தைக் கடந்து வீடு திரும்ப முடியாமல் தவித்த நிலையில், கிராம மக்கள் இணைந்து நின்று அவர்களை மீட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதால், ஆற்றைக் கடக்க உயர்மட்டப் பாலம் அமைத்து தருமாறு, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments