தி.மு.க ஆட்சியை கூட்டணி கட்சியினர் விமர்சிக்க தொடங்கியுள்ளர் - இ.பி.எஸ்

0 132

இது நாள் வரை விமர்சிக்காமல் இருந்த கூட்டணி கட்சி தலைவர்கள் இப்போது திமுக ஆட்சியை விமர்சிக்க தொடங்கியுள்ளதே அக்கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.

மாநிலத்தின் கடன்சுமை படிப்படியாக குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க கடந்த 41 மாதங்களில் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததே தி.மு.க ஆட்சின் சாதனை எனவும் இ.பி.எஸ் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments