தலைமைச் செயலகத்தில் பயிற்சி நிறைவுச் சான்றிதழை வழங்கினார் துணை முதலமைச்சர்

0 146

சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையுடனும், தடுமாற்றத்துடனும் அரசு ஊழியர்கள் பாடிய நிலையில், பிழையின்றி ஒருமுறை பாடும்படி உதயநிதி ஸ்டாலின் கூறியதையடுத்து நிகழ்ச்சியின் நிறைவில் மீண்டும் பாடப்பட்டது.

பிறகு செய்தியாளரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தொழில்நுட்ப கோளாறு சில இடங்களில் பாடல் சரியாக கேட்காததால் மீண்டும் சரியாக பாட வைத்ததாகவும் கூறியதுடன், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டும் எந்த பிரச்சனையும் கிளப்பிவிடாதீர்கள் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments