திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து புளிய மரத்தில் மோதி 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

0 264

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திடீரென குறுக்கே வந்த டூவீலர் மீது மோதுவதை தவிர்க்க திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதால் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கோட்டைப்பட்டியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, புதுப்பட்டியில் ஊருக்குள் இருந்து வந்த டூவீலர் சாலையில் ஏறியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் அரசுப்பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்த நிலையில் அதில் சிக்கிய ஓட்டுநர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments