கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ரசாயன நுரை குறைந்ததால் போக்குவரத்து தொடங்கியது

0 317


கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் குவிந்திருந்த ரசாயன நுரை பெரும்பாலான அளவு குறைந்ததால் அங்கு அப்பகுதியில் போக்குவரத்து சீராகியுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தால் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரில் இரசாயன நுரை அதிகளவில் வெளியேறி தரைப்பாலத்தில் குவிந்ததால் நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

நேற்று காலை முதல் மாலை வரை நுரைகளை அகற்றும் பணி நடந்த நிலையில்,   தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து குறைந்ததையடுத்து, நுரைகளும் காற்றில் கரைந்து குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments