பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை AI கேமரா மூலம் கண்காணிக்க மாநகராட்சி முடிவு..

0 205

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க உள்ளதாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

பேருந்து வழித்தடம், நடை பாதைகள், பேருந்து நிறுத்தம் என சுமார் ஆயிரம் இடங்களில் AI கேமரா பொருத்தி ரிப்பன் மாளிகையில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைத்து கண்காணிக்க உள்ளதாக கூறினார்.

விதிகளை மீறி குப்பை கொட்டியதாக, கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 17 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக குமரகுருபரன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments