தாம்பரம் அருகே, சாலைகளில் சுற்றித் திரிந்த 76 மாடுகள் பறிமுதல் - உயிரிமையாளருக்கு அபராதம் விதிப்பு..
வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது..
சென்னை, வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஜோதிவேல் என்பவரை அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மனைவியைக் கொலை செய்த வழக்கில் சிறை சென்று வந்த ஜோதிவேலுவை உறவினர்கள் கண்டுகொள்ளாததாலும் வேலையும் கிடைக்காததாலும் விரக்தியில் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
செல்போன் எண்ணை வைத்து அவரை போலீசார் மடக்கியுள்ளனர்.
Comments