ரேபிடோ கார் ஓட்டுநரைத் தாக்கிய கணவன், மனைவி கைது..

0 265

சென்னையில் கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ரேபிடோ ஓட்டுநரான வினோத்குமார் என்பவரை போனில் அழைத்த  பிரவீனா என்பவர்,  மணலியிலிருந்து செங்குன்றம் செல்ல வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அவர் கூறிய இடத்துக்குச் சென்றபோது, 2 ஆண்கள் காரில் ஏறியதாக கூறப்படுகிறது.

சிறிது தூரத்தில் அவர்கள் இருவரும் வினோத்தைக் கடுமையாகத் தாக்கி, 2 ஆயிரத்து 700 ரூபாயைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரில் பிரவீனா என்ற பெண்ணையும் அவரது கணவரான ராஜி என்பவரையும் கைது செய்த போலீசார், கலை என்பவரைத் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments