டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. புயல் நகர்வதால் கடலோரப் பகுதியில் இருப்பவர்களை வெளியேற்றம்..

0 281

டானா புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 56 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒடிசாவில் பல இடங்களில் பலத்த காற்றுடன், கனமழை பெய்யத்தொடங்கியுள்ள நிலையில், பூரி கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

கடலோரப்பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

டானா புயல் ஒடிசா மாநிலம் பூரிக்கும், மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுக்கும் இடையே இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments