சென்னையில் போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து நகைகளை வாங்கிய நபர் மகாராஷ்டிர சோலாப்பூரில் கைது..

0 217

சென்னை பெரியமேட்டில் போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைப் பெற்றுக் கொண்டு தப்பிய நபரை மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

பெரியமேட்டிலுள்ள லாட்ஜ் ஒன்றின் அறையில் தங்கியிருந்த கல்லுராம் என்ற அந்த நபர், உடல்நிலை சரியில்லாததால் நேரில் வர முடியாது எனக் கூறி, நகைக்கடை உரிமையாளரை தாம் தங்கியிருந்த அறைக்கே போன் செய்து அழைத்ததுள்ளான்.

25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை அவரிடம் பெற்றுக்கொண்ட கல்லுராம், ஒரு பையில் மேல் பகுதியில் அசல் நோட்டுகளையும் கீழே வெள்ளைத் தாள்களையும் வைத்து கொடுத்துள்ளான். சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய பெரியமேடு போலீசார், ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் கொடுத்து உதவி கோரினர்.

சோலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய கல்லுராமை, அங்குள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினர் பிடித்து, பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments