கனமழையால் சேதமடைந்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆணையர் நேரில் சென்று ஆய்வு..

0 184

கனமழையால் பாதிக்கப்பட்ட மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஆட்சித் தலைவர் சங்கீதா, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்பின்காரணமாக திருமலை நகர், பாண்டியன் நகர் உள்ளிட்ட  300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்திருந்தது. அப்பகுதி மக்களிடம் குறைகளை ஆட்சியர் கேட்டறிந்தார்.

மழை வருவதற்கு முன்பே ஏன் கால்வாய்களை தூர்வாரவில்லை என அதிகாரிகளைக் கடிந்துகொண்ட ஆட்சியர், கால்வாய்கள் விரைவில் தூர்வாரப்படும் என அப்பகுதியினரிடம் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments