சுங்கக்கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற த.வெ.கவினர்.. சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கியதாகப் புகார்

0 335

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த கரியமங்கலம் சுங்கச்சாவடியில் தமிழக வெற்றிக் கழகக் கொடியுடன் சென்றவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அவர்களது காரை மறித்த சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சக ஊழியர்கள் காரை செல்ல விடாமல்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டு விட்டு வருவதாகவும் ஆள் தெரியாமல் விளையாட வேண்டாம் என்றும் காரில் வந்த ஒருவர் ஊழியரை மிரட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments