திருவனந்தபுரம் பகுதியில் உள்ள கோவிலில் புகுந்த திருடன்... சிசிடிவி கேமராவை பார்த்ததும் பக்தனாக மாறினார்

0 229

திருவனந்தபுரம் பாறசாலை பகுதியில் உள்ள ஸ்ரீதர்மசாசா கோவிலில்  சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த திருடன்,  சிசிடிவி கேமராக்களை பார்த்தவுடன் பக்தனாக மாறி மூலவர் சன்னதி முன் விழுந்து வணங்கி அங்கப்பிரதட்சணம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.

பின்னர் கோவில் கிணற்றில் தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றிய பின்வெளியேறியதும் பதிவாகியுள்ளது. இது குறித்து பொழியூர் காவல் நிலையத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் கோவில் நிர்வாகம் புகாரளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments