பரிகாரம் செய்வதுபோல் நடித்து, பெண்ணின் தாலிக்கொடியை திருடிய 2 குடுகுடுப்பைக்காரர்கள்

0 123

வேடசந்தூர் அருகே, பரிகாரம் செய்வதுபோல் நடித்து பெண்ணின் தாலிக்கொடியை திருடிச் சென்ற குடுகுடுப்பைக்காரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், அவரது கணவர் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறிய குடுகுடுப்பைக்காரர்கள் 2 பேர், அதற்கு பரிகாரமாக அருகிலுள்ள கோயிலுக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி, அவரது தாலிக்கொடியை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் திரும்ப வரவில்லை என ஜோதி அளித்த புகாரின் பேரில், குடுகுடுப்பைக்காரர்கள் தங்கும் இடத்துக்கு சென்று தந்தை, மகனான அந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY