ஹெல்மெட் அணிந்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளையர்களை தேடும் போலீசார்

0 205

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஹெல்மெட் அணிந்தபடி, பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற இருவரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

பூமார்க்கெட்டில் உணவகம் நடத்திவரும் குமார்-சங்கீதா தம்பதியினர் செல்வராஜ் என்பவரின் வீட்டின் முதல்மாடியில் வசித்துவருகின்றனர்.

வழக்கம் போல் நேற்று இருவரும் கடைக்கு சென்றிருந்த நிலையில், ஹெல்மெட் அணிந்த இளைஞர்கள் மாடியிலிருந்து இறங்கியதை பார்த்த செல்வராஜ், அவர்களிடம் யார் என கேட்டதாகவும், அவர்கள் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த குமார் பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY