சிவகங்கையில் தொடர்மழையால் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் -விவசாயிகள் புகார்

0 154

தொடர்மழை காரணமாக சிவகங்கை மாவட்டம், வேங்கைபட்டியில் கண்மாய்கள் நிரம்பி வெளியேறிய உபரி நீர் விளைநிலங்களில் புகுந்ததில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

புது கண்மாய், வெட்டுமாளி, கட்டயன், பனங்குடி உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில் உபரி நீர் செல்ல வழியில்லாததால் விளைநிலங்களுக்குள் புகுந்ததில் நடவு செய்து 3 நாட்களே ஆன பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY