18 வயது பெண்ணுக்கு தஞ்சையிலிருந்து 2.20 மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

0 184

இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு, 24 மணி நேரமும் செயற்கை சுவாசம் பெற்று வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கு சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம், தானமாக பெறப்பட்ட நுரையீரல்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்காக தஞ்சையில் மூளைச் சாவு அடைந்த ஒருவரின் இரண்டு நுரையீரல்களும் திருச்சி வரை சாலை வழியாகவும் அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டுள்ளன.

தற்போது அப்பெண், இயற்கையான முறையில் சுவாசித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY