முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ்..மின்கம்பத்தில் மோதியதில் மருத்துவர் உயிரிழப்பு..

0 254

ஈரோடு மாவட்டம் வேலாம்பாளையத்தில் மின்கம்பத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவர் உயிரிழந்தார். சிவகிரி காளிபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார், சென்னை மருத்துவக் கல்லூரியில் மேல்படிப்பு படித்து கொண்டே மருத்துவராக பணியாற்றி வந்தார்.

சொந்த ஊருக்கு வந்திருந்த செந்தில்குமாருக்கு சுகர் அதிகரித்ததால் முத்தூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஈரோடுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் செந்தில்குமார் உயிரிழந்தார்.

அவரது தாயார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் ஆகியோர் காயமடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY