பணி நேரத்தில் மயங்கி விழுந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு

0 214
பணி நேரத்தில் மயங்கி விழுந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு

வேலூர் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த முருகன் என்பவர் நேற்று இரவு பழைய பேருந்து நிலையம் அருகே மக்கான் பகுதியில் தூய்மை பணி செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கால்வாய்க்கு அருகில் மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments