மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தாழ்தள பேருந்து சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி

0 174

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தாழ்தள சிறப்பு பேருந்துகளின் சேவையை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் ஏறி, இறங்கும் வகையில் சாய்வு பலகை வசதி, படிக்கட்டின் உயரத்தை குறைக்கும் வசதி, பேருந்துக்குள் வீல் சேர் நகராமல் இருப்பதற்கான வசதிகள் உள்ளன.

தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 20 பேருந்துகள் மதுரை பெரியார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருமங்கலம், ஊமச்சிக்குளம், அழகர்கோவில், மேலூர், விரகனூர் சுற்றுச்சாலை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments