சென்னை மெரினா கடற்கரையில், எச்சரிக்கையை மீறி குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு

0 177

சென்னை மெரினாவில், காவலர்கள் எச்சரிக்கையை மீறி நீராட முயன்று கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட தனியார் கல்லூரி 3ஆம் ஆண்டு மாணவரின் சடலத்தை மெரினா உயிர் பாதுகாப்புக் குழுவினர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மயிலாப்பூர் விவேகானந்தர் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கடற்கரையில் குளிக்கச் சென்றபோது, ரோந்து பணியில் இருந்த பெண் காவலர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், அதைமீறி, அவர்களில் 2 பேர் சிறிது தூரம் தள்ளிச் சென்று கடலுக்குள் இறங்கியபோது, பெரிய அலையொன்றில் சிக்கினர்.

இதில், ஒருவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், மற்றொருவர் அலையின் தாக்கத்தால் கரை ஒதுக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு மாயமான மாணவர், பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments