ரயில்வேயிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் 25 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை

0 307

திருவள்ளூர் கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 25 பேருக்கு சம்மன் அனுப்பி கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த 25 பேரில் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் ரயில்வே நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தற்போது பணியில் இருப்பவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

பொன்னேரி உள்ளிட்ட இடங்களில், தண்டவாளங்களில் போல்டு நட்டுகள் கழற்றப்படுவது உள்ளிட்ட சதி வேலைகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி தலைமையிலான 2ஆம் நாள் விசாரணையும் இன்று நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments