மழைக்காலத்தில் வாகனங்களை மேம் பாலத்தில் நிறுத்துவதற்கு அபராதம் இல்லை...

0 282

சென்னையில் மழைக்காலத்தில் மேம்பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என்று பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. வாகனங்களை நிறுத்துவதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு போக்குவரத்து போலீஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சவாலான வானிலையின் போது வாகனங்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறியவும் மக்களின் உதவிக்கும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகளின் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments