வாங்கிய பிரியாணியில் பீடித்துண்டு இருந்ததாக குடிபோதையில் ரகளை..

0 270

கோவை காந்திபுரம் பிரபல அசைவ உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் பீடித்துண்டு இருந்ததாக வாடிக்கையாளர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டார்.

ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்த சத்யநாராயணன் என்பவர் பிரியாணியில் ஒரு பீடித்துண்டு இருந்ததாக கடைக்கு வந்து, ஊழியர்களிடம் தகராறு செய்தார்.

போதை தலைக்கேறி ரகளை யில் ஈடுபட்ட சத்யநாராயணனை விசாரிக்க வந்த போலீசாரையும் வசைபாடி இருக்கின்றார்.

இந்நிலையில் பிரியாணியில் இருந்தது இலைதான் என்றும் பீடித்துண்டு அல்ல என்றும் உணவகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments