புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சேறும், சகதியுமான தற்காலிக பேருந்து நிலையம்

0 255

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஏஎப்டி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அடுத்து 3 நாட்களுக்கு புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் போர்க்கால அடிப்படையில் பேருந்து செல்லும் வழித்தடங்களில் தார் சாலை அமைக்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments