கவரப்பேட்டையில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில்போக்குவரத்து தொடங்கியது...

0 118

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் விபத்து நடந்த இடத்தில் 24 மணி நேரத்தில் ரயில்பாதைகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில்போக்குவரத்து தொடங்கியது.

டெல்லி நிஜாமுதீனில் இருந்து சென்னை செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், மணிக்கு 10 கி.மீ வேகத்தில், மெயின் அப் லைனில் இயக்கப்பட்டது. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, ரயில்வே ஊழியர்கள், முற்றிலுமாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, தண்டவாள சீரமைப்பு பணிகளும் மின்சார வயர் சீர் அமைப்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments