பெண்ணின் கழுத்தை அறுத்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொலைகாரர்களுக்கு போலீசார் வலை

0 244

திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

பருத்தியூரைச் சேர்ந்த நாராயணசாமியின் மனைவி கண்ணகி  எப்பொழுதும் கழுத்தில் ஏராளமான நகைகளை அணிந்திருப்பது வழக்கம்.

இந்நிலையில் வெளியூர் சென்ற நாராயணசாமி ஊருக்குத் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்புறம் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கண்ணகி சடலமாகக் கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த  30 சவரனுக்கும் மேற்பட்ட நகைகள் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments