கஞ்சா போதையில் இருந்த மாணவர்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாளால் வெட்டு... மாணவன் உள்பட 2 பேர் கைது

0 284

கோவையில் கஞ்சா போதையில் இருந்த கல்லூரி மாணவர்களை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட விரோதம் காரணமாக அ.தி.மு.க பிரமுகரை அரிவாளால் வெட்டிய மாணவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

குனியமுத்தூரில் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா போதையில் இருந்ததாகவும், அவர்களை 92 - வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான ராஜா திட்டி விரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் மாணவரான கோபிநாத், இரண்டாமாண்டு படித்து வரும் மாணவருடன் சேர்ந்து ராஜாவை வெட்டியதால் காவல்துறையினர் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments