சென்னையில் 18 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு ரூ.50 கோடி நிலத்தை மீட்டெடுத்த நடிகர் கவுண்டமணி

0 289

சென்னையிலுள்ள தனது 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, 18 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி நடிகர் கவுண்டமணி மீட்டெடுத்துள்ளார்.

கோடம்பாக்கத்தில் உள்ள 5 கிரவுண்ட் இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக, ஸ்ரீஅபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கவுண்டமணி 3.58 கோடி ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது.

கட்டுமானப் பணி முடியாததோடு, நிலத்தையே கையகப்படுத்த அந்த நிறுவனம் முயல்வதாகக் கூறி கவுண்டமணி தரப்பில் 2006-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

தீர்ப்பு அடிப்படையில், நீதிமன்ற ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்போடு அந்த இடத்திலிருந்த ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி நிலத்தை மீட்டு, கவுண்டமணி தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments