பணியிலிருந்தபோது உயிரிழந்த போக்குவரத்து தலைமைக் காவலர்.. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!
சென்னை எண்ணூர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிய லட்சுமணன் என்பவர் பணிக்குச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் கடுகனூர் கொண்டு செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் அரசு நிதியுதவியும் வழங்கப்பட்டது.
Comments