கண்டெய்னர் லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்.. இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு..

0 228

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

கணவாய்ப்பட்டியில் உள்ள ஜூஸ் பேக்டரிக்குச் சென்ற கண்டெய்னர் லாரி சாலையைக் கடக்க வலதுபுறம் திரும்பியபோது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments