மீன்பிடி படகுகள் மீது மோதிய சரக்கு கப்பல்.. நடுக்கடலில் விழுந்த 13 மீனவர்களும் உயிர் தப்பினர்..!

0 126
மீன்பிடி படகுகள் மீது மோதிய சரக்கு கப்பல்.. நடுக்கடலில் விழுந்த 13 மீனவர்களும் உயிர் தப்பினர்..!

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் 5 நாட்டிகல் மைலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 மீன்பிடி படகுகளின் மீது சிறிய வகை சரக்கு கப்பல் மோதியதாக மீனவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

மாலத்தீவில் சரக்கு இறக்கி விட்டு தூத்துக்குடிக்கு வந்த சரக்கு கப்பல் மோதியதில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகள் கிழிந்து சேதமானதாகவும், கடலில் விழுந்த நிலையில் 13 மீனவர்களும் உயிர் தப்பியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments