சிவகங்கை குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் இறந்த விவகாரத்தில் யானைப்பாகன் கைது

0 331

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் உள்ள சண்முகநாத பெருமான் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுப்புலட்சுமி யானை இறந்தது தொடர்பாக, பராமரிப்பில் அஜாக்கிரதையாக இருந்ததாக யானைப்பாகன் கார்த்திக் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி யானையின் கால்களை கட்டிவிட்டு கார்த்திக் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் மின்கசிவால் ஏற்பட்ட தீ தகரக் கொட்டகையின் அடியில் வேயப்பட்டிருந்த ஓலையில் பரவிய நிலையில், யானை அங்கிருந்து வெளியேற முடியாமல் தீக்காயம் அடைந்து இறந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments