20 செ.மீ மழை பொழிவையும் எதிர்கொள்ள தயார் நிலை.. மாநகராட்சி ஆணையர்

0 190

சென்னையில் 20 சென்டி மீட்டர் வரை மழைப் பொழிவு இருந்தாலும் அதை தாங்கும் வகையில் வடிகால் கட்டமைப்பை உருவாக்கி உள்ளதாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

3,040 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 1,150 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருவதாகவும் குமரகுருபரன் கூறினார்.

செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சாலைகளில் மில்லிங் செய்யக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், படகுகள்,100 HP மோட்டார்கள் அந்தந்த மண்டலங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் குமரகுருபரன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments