திரைப்பட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சம்பள பாக்கி விவகாரம்... காவல்நிலையத்தில் வைத்து பேமண்ட் வழங்கப்பட்டது

0 235

மதுரையில் படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்ற 300க்கும் மேற்பட்ட துணை நடிகர்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து ஏஜன்ட் மூலம் பணம் வழங்கப்பட்டது.

கடந்த மாதம் மதுரை ரயில்வே நிலையத்தில் சாலையோரம் வசிக்கும்  நபர்களை ராமேஸ்வரம் மண்டபம் பகுதிக்கு திரைப்படம் ஒன்றில் துணை நடிகர்களாக நடிப்பதற்கு ஏஜன்ட்டுகள் அழைத்து சென்றனர்.

சம்பள பாக்கி குறித்து பாதிக்கப்பட்ட துணை நடிகர்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததன் பெயரில் போலீசார் ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டனர் .இதையடுத்து ஏஜென்ட் பாண்டியராஜன் மற்றும் பாண்டிச்செல்வி ஆகியோர்  துணை நடிகர்களுக்கு சம்பள பாக்கியை வழங்கினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments