ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி

0 113

ஹரியானாவின் சோனிபட் நகரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி , நாட்டில் சிறுதொழில்கள் நலிந்துவிட்டதாக மக்கள் கூறுவதாக தெரிவித்தார்.

அம்பானி திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்ததாகவும், ஆனால் விவசாயிகள் கடன் பெற்றுத்தான் திருமணத்தை நடத்த முடியும் நிலை உள்ளதாகவும் கூறினார்.

ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஒரு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments