வாக்கு வங்கியை வளர்ப்பது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் - பிரதமர் மோடி

0 190

நாட்டின் வளர்ச்சியை புறம்தள்ளிவிட்டு, வாக்காளர்களை திருப்திப்படுத்துவது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஒரே நோக்கம் என பிரதமர் மோடி சாடியுள்ளார்.

ஹரியானா மாநிலம் பல்வாலில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அகற்றப்போவதாக கூறியுள்ள காங்கிரஸ், கர்நாடகாவில் அதை செய்துகாட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சாதி வெறியை தூண்டி அதன் மூலம் நாட்டுப்பற்றை காங்கிரஸ் நசுக்க முயல்வதாகவும், உழைப்பை நம்பாமல், பொய்யை மட்டுமே அக்கட்சி நம்புவதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments