முகத்தில் கைக்குட்டை அணிந்து வந்து திருடன் கைவரிசை.. கடையின் கூரை பிரித்து திருட்டு..

0 175

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தில் நித்யா என்பவருக்கு சொந்தமான விசாகா மெட்டல் மார்ட் என்ற கடையின் மேற்கூரையை பிரித்து கல்லாவில் இருந்த 30 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடையின் ஊழியர்கள் வழக்கம்போல் காலையில் கடையை திறந்த போது மேற்கூரை பிரிந்தும், கல்லா பெட்டி உடைந்தும் கிடந்தது குறித்து நித்யாவிற்கு தகவல் கொடுத்தனர்.

நித்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கடையின் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது மர்ம நபர் முகத்தில் கைக்குட்டை அணிந்த படி,மொபைல் பிளாஷ் லைட் அடித்து கல்லாவில் திருடுவது பதிவாகியிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments