தலையை சிதைத்து இளைஞர் படுகொலை.. தி.மு.க பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழியா..?

0 452

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தலையை சிதைத்து இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

பேகம்பூரைச் சேர்ந்த இர்ஃபான் மற்றும் முகமது அப்துல்லா ஆகியோர் சென்ற இருசக்கர வாகனத்தை மறித்த கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இர்ஃபான் உயிரிழந்தார், முகமது அப்துல்லா படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

தி.மு.க பிரமுகர் பட்டறை சரவணன் கொலை வழக்கில் இர்ஃபானுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் பழிப்பழியாக கொலை நடந்ததா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments